சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் சேலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்திருப்பது விசாரணையில் அம்பலம்.


கோவை: ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் லட்சக்கணக்கில் ஆன்லைன் மூலம் பணம் பறித்து வந்த இருவரை l கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த போலீசார், கோவையில் வசிக்கும் வடமாநில வியாபாரிகளின் செல்போன் எண்களை பெற்று, போலீசில் இருந்து பேசுவதாக கூறி மர்ம நபர்கள் தொடர்புகொண்டு வந்துள்ளனர்.

அவர்கள், "நீங்கள் ஆன்லைனில் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளீர்கள். உங்களை கைது செய்து சிறையில் அடைப்பதுடன், உங்கள் புகைப்படத்தை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவோம். இதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் அனுப்ப வேண்டும்" என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த பலர் அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வடவள்ளி பி.என்.புதூரைச் சேர்ந்த பின்னி மற்றும் சரவணம்பட்டியைச் சேர்ந்த கிஷோர் குமார் ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட கிஷோர் குமார் மீது கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஏற்கனவே நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கும்பல் சேலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...