கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


கோவை: கோவை சீரநாயக்கன்பாளையம், பி.என்.புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதம் ஏற்பட்டது.

இரண்டு தளங்களைக் கொண்ட இந்த குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. நேற்று பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தொழிலாளர்கள் குடோனை பூட்டி சென்ற நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி, கட்டிடத்திலிருந்து கரும்புகை வெளியேறியது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணபதி உத்தரவின் பேரில், கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பசாமி தலைமையில், தொண்டாமுத்தூர், பீளமேடு, கோவை வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களுடன் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.



இரண்டு தளங்களிலும் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் கடும் வெப்பம் நிலவியது. பாதுகாப்பு கவசங்கள் அணிந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் மற்றும் நுரையை பயன்படுத்தி சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேலும், தீ அருகில் இருந்த மாவு ஆலை பகுதியிலும் பரவிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு அங்கும் தீயை அணைத்தனர்.

குடோனுக்கு அருகில் ஏராளமான குடியிருப்புகள் இருந்ததால், தீயை விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் மற்ற கட்டிடங்களுக்கு பரவுவது தடுக்கப்பட்டது.

தீ விபத்திற்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினரும் கவுண்டம்பாளையம் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சேத மதிப்பு உடனடியாக கணக்கிடப்படவில்லை என்றாலும், லட்சக்கணக்கில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...