கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


கோவை: கோவை சீரநாயக்கன்பாளையம், பி.என்.புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதம் ஏற்பட்டது.

இரண்டு தளங்களைக் கொண்ட இந்த குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. நேற்று பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தொழிலாளர்கள் குடோனை பூட்டி சென்ற நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி, கட்டிடத்திலிருந்து கரும்புகை வெளியேறியது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணபதி உத்தரவின் பேரில், கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பசாமி தலைமையில், தொண்டாமுத்தூர், பீளமேடு, கோவை வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களுடன் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.



இரண்டு தளங்களிலும் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் கடும் வெப்பம் நிலவியது. பாதுகாப்பு கவசங்கள் அணிந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் மற்றும் நுரையை பயன்படுத்தி சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேலும், தீ அருகில் இருந்த மாவு ஆலை பகுதியிலும் பரவிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு அங்கும் தீயை அணைத்தனர்.

குடோனுக்கு அருகில் ஏராளமான குடியிருப்புகள் இருந்ததால், தீயை விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் மற்ற கட்டிடங்களுக்கு பரவுவது தடுக்கப்பட்டது.

தீ விபத்திற்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினரும் கவுண்டம்பாளையம் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சேத மதிப்பு உடனடியாக கணக்கிடப்படவில்லை என்றாலும், லட்சக்கணக்கில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...