திருப்பூர்: தமிழக முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்கு வருவதை முன்னிட்டு முதலமைச்சர் நிகழ்ச்சியில் பங்குபெறும் செய்தியாளர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் வருவதை முன்னிட்டு முதல்வர் நிகழ்ச்சியில் பங்குபெறும் செய்தியாளர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வரும் 6ம் தேதி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள அரசுத்துறை அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள், நலத்திட்ட உதவிகளை பெறக்கூடிய பயனாளிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், முதலமைச்சர் நிகழ்ச்சியை செய்தி சேகரிக்கச் செல்லும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வரும் 6ம் தேதி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள அரசுத்துறை அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள், நலத்திட்ட உதவிகளை பெறக்கூடிய பயனாளிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், முதலமைச்சர் நிகழ்ச்சியை செய்தி சேகரிக்கச் செல்லும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.