கோவையில் மெட்ரோ ரயில் அமைக்க முதற்கட்ட அறிக்கை தயார்..! வெள்ளலூர் பேருந்து நிலையம் வரை வழித்தடம் சேர்க்க முடிவு!

கோவை: கோவையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்காக தயார் செய்யப்பட்டு உள்ள முதற்கட்ட அறிக்கையில் கூடுதலாக வெள்ளலூர் பேருந்து நிலையம் வரை செல்லும் வழித்தடம் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.


கோவை: கோவையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்காக தயார் செய்யப்பட்டு உள்ள முதற்கட்ட அறிக்கையில் கூடுதலாக வெள்ளலூர் பேருந்து நிலையம் வரை செல்லும் வழித்தடம் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

கோவையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு இங்கு மெட்ரோ ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று

முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கோவையில் மெட்ரோ ரயில் இயக்க சாத்தியக்கூறுகள் உள்ள வழித்தடங்கள் குறித்து முதற்கட்ட ஆய்வு செய்தது. தற்போது இந்த முதற்கட்ட ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையில் மொத்தம் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மொத்த தூரம் 136 கிலோ மீட்டர் ஆகும். இதில் அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, தொண்டாமுத்தூர் ரோடு, திருச்சி ரோடு, சத்திரோடு ஆகிய 5 வழித்தடங்கள் ஆகும்.

இந்த நிலையில், இதில் கூடுதலாக வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு செல்லும் வகையில் ஒரு மெட்ரோ வழித்தடம் ஏற்படுத்தவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தமிழக அரசிடம் இந்த அறிக்கையை அளித்ததும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...