கோவை கிணத்துக்கடவு அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்து - 15 பேர் படுகாயம்!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆதியூரில் வசிக்கக்கூடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் காங்கேயம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட செல்வதற்காக இன்று அதிகாலை சரக்கு ஆட்டோவில் புறப்பட்டனர். அந்த ஆட்டோ பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு கல்லாங்காடு புதூரில் உறவினர்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ கோவையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அப்போது, அந்த ஆட்டோ கிணத்துக்கடவு பகுதியில் சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியதில் ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...