கோவை: கோவை உக்கடம் பகுதியில் ரூபாய் 95 லட்சம் செலவில் நவீன மயமாக்கப்பட்ட காய்கறி மார்கெட்டை, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி இன்று மாலை துவக்கி வைத்தார்.
கோவை: கோவை உக்கடம் பகுதியில் ரூபாய் 95 லட்சம் செலவில் நவீன மயமாக்கப்பட்ட காய்கறி மார்கெட்டை, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி இன்று மாலை துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர், "மாநகராட்சியால் நவீனமயமாக்கபட்ட இந்த காய்கறி மார்கெட் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இதனை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும். தற்போது, கொரோனா நோய் தொற்று அபாயம் உள்ளதால், அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்", என்று அறிவுத்தினார்.
மேலும், பேசுகையில், உக்கடம் பகுதியில் தினசரி மார்கெட் அமைக்க, பொது மக்கள் தொடர் கோரிக்கை வைத்ததாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த மார்கெட்டில் 303 கடைகள் அமைக்கபட்டு உள்ளது, என்று தெரிவித்தார்.

"நவீனமயமாகப்பட்ட, இந்த மார்கெட் மூலம் மக்கள் மற்றும் வியாபாரிகள் பயன் பெறுவார்கள். உக்கடம் காய்கறி மார்கெட்டை, போலவே கிணத்துக்கடவு பகுதியிலும் திறக்கபட்டு உள்ளதாக", அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தமிழக முதல்வர் அனைத்து மாவட்டங்களில் சுற்று பயணம் மேற்கொண்டு மக்களின் தேவைகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்த அவர், நாளை மறுதினம் முதல்வர் விமானம் மூலம் கோவை வந்து, இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய ஆட்சியில், கோவை மாவட்டதிற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு உள்ளதாக கூறிய உள்ளாட்சித்துறை அமைச்சர், அவினாசி சாலையில் மிக பெரிய பாலம் அமைக்கும் பணி விரைவில் துவங்கபட உள்ளதாக தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் அகலப்படுத்தபட்டு, விபத்துக்கள் குறைக்கபட்டு உள்ளதாக, தெரிவித்த அவர், பொள்ளாச்சி சாலையில் அமைக்கபட்டுள்ள பாலம் வழியாக, கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு 20 நிமிடங்களில் சென்றடைய முடியும், என்றார்.
கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து பேசுகையில், "விரிவாக்க பணிகள் மூலம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்கபடும் போது இன்னும் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும்", என்று தெரிவித்தார்.