கோவை உக்கடம் பகுதியில் தினசரி காய்கறி மார்க்கெட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை: கோவை உக்கடம் பகுதியில் ரூபாய் 95 லட்சம் செலவில் நவீன மயமாக்கப்பட்ட காய்கறி மார்கெட்டை, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி இன்று மாலை துவக்கி வைத்தார்.



கோவை: கோவை உக்கடம் பகுதியில் ரூபாய் 95 லட்சம் செலவில் நவீன மயமாக்கப்பட்ட காய்கறி மார்கெட்டை, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி இன்று மாலை துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர், "மாநகராட்சியால் நவீனமயமாக்கபட்ட இந்த காய்கறி மார்கெட் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இதனை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும். தற்போது, கொரோனா நோய் தொற்று அபாயம் உள்ளதால், அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்", என்று அறிவுத்தினார்.



மேலும், பேசுகையில், உக்கடம் பகுதியில் தினசரி மார்கெட் அமைக்க, பொது மக்கள் தொடர் கோரிக்கை வைத்ததாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த மார்கெட்டில் 303 கடைகள் அமைக்கபட்டு உள்ளது, என்று தெரிவித்தார்.



"நவீனமயமாகப்பட்ட, இந்த மார்கெட் மூலம் மக்கள் மற்றும் வியாபாரிகள் பயன் பெறுவார்கள். உக்கடம் காய்கறி மார்கெட்டை, போலவே கிணத்துக்கடவு பகுதியிலும் திறக்கபட்டு உள்ளதாக", அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தமிழக முதல்வர் அனைத்து மாவட்டங்களில் சுற்று பயணம் மேற்கொண்டு மக்களின் தேவைகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்த அவர், நாளை மறுதினம் முதல்வர் விமானம் மூலம் கோவை வந்து, இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சியில், கோவை மாவட்டதிற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு உள்ளதாக கூறிய உள்ளாட்சித்துறை அமைச்சர், அவினாசி சாலையில் மிக பெரிய பாலம் அமைக்கும் பணி விரைவில் துவங்கபட உள்ளதாக தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் அகலப்படுத்தபட்டு, விபத்துக்கள் குறைக்கபட்டு உள்ளதாக, தெரிவித்த அவர், பொள்ளாச்சி சாலையில் அமைக்கபட்டுள்ள பாலம் வழியாக, கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு 20 நிமிடங்களில் சென்றடைய முடியும், என்றார்.

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து பேசுகையில், "விரிவாக்க பணிகள் மூலம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்கபடும் போது இன்னும் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும்", என்று தெரிவித்தார்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...