கோவை: கோவையில் நடைபெற்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கருத்துக் கேட்பு கூட்டத்தில் தொழில் முனைவோர், விவசாயிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வழங்கினர்.
கோவை: கோவையில் நடைபெற்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கருத்துக் கேட்பு கூட்டத்தில் தொழில் முனைவோர், விவசாயிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வழங்கினர்.

கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் டி .ஆர். பாலு மற்றும் குழு உறுப்பினர்கள் டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா, சுப்புலட்சுமி ஜெகதீசன் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவையில் இருக்கக் கூடிய சிறு குறு தொழில் முனைவோர், ஓட்டல் உரிமையாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.

இதனை தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் சமூக இயக்கங்கள் சார்பிலும் அறிக்கை தயாரிப்பு குழுவினர் மனுக்களை பெற்றனர். இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடனும் அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

மேலும், சமூக அமைப்புகள் சார்பில் கலந்து கொண்ட ஒ.பி.சி கூட்டமைப்பினர் தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் மத்திய தொகுப்பிற்கு தமிழக மருத்துவ இடங்களை வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினர்.
இதேபோல, பல்வேறு அமைப்பினரும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்களை மனுக்களாக அறிக்கை தயாரிப்பு குழுவிடம் வழங்கினர்.

கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் டி .ஆர். பாலு மற்றும் குழு உறுப்பினர்கள் டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா, சுப்புலட்சுமி ஜெகதீசன் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவையில் இருக்கக் கூடிய சிறு குறு தொழில் முனைவோர், ஓட்டல் உரிமையாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.

இதனை தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் சமூக இயக்கங்கள் சார்பிலும் அறிக்கை தயாரிப்பு குழுவினர் மனுக்களை பெற்றனர். இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடனும் அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

மேலும், சமூக அமைப்புகள் சார்பில் கலந்து கொண்ட ஒ.பி.சி கூட்டமைப்பினர் தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் மத்திய தொகுப்பிற்கு தமிழக மருத்துவ இடங்களை வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினர்.
இதேபோல, பல்வேறு அமைப்பினரும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்களை மனுக்களாக அறிக்கை தயாரிப்பு குழுவிடம் வழங்கினர்.