கோவை ரயில் நிலையத்தில் சூரிய ஒளி தகடுகள் மூலம் ரூ.6 லட்சம் வரை மின்கட்டணம் சேமிப்பு - ரயில்வே துறை அதிகாரிகள் தகவல்!

கோவை: கோவை ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளி தகடுகள் மூலம் இதுவரை சுமார் ரூ.6 லட்சம் வரை மின்கட்டணம் சேமிக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளி தகடுகள் மூலம் இதுவரை சுமார் ரூ.6 லட்சம் வரை மின்கட்டணம் சேமிக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக வருவாய் அளவிலும், ரயில்கள் வந்து செல்வதிலும் பெரிய ரயில் நிலையமாக கோவை ரயில் நிலையம் திகழ்கிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 70க்கும் மேற்பட்ட ரயில்கள் பிற மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் வந்து செல்கின்றன. இதன்மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், தற்போது கொரோனா அச்சம் காரணமாக சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோவை ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளன. மேலும் பொதுமக்கள் வந்து செல்ல சுரங்கப்பாதைகள், தானியங்கி படிக்கட்டுகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கோவை ரயில்நிலையத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 2,100 யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. மேலும் இதனால் ரயில் நிலையத்திற்கு அதிகளவு மின்கட்டணம் ஏற்படுகிறது.

இந்த நிலையில், இதனை தவிர்க்கும் வகையில் கோவை ரயில் நிலைய மேற்கூரையில் 100 கிலோ வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின் ஒளி தகடுகள் பொருத்தப்பட்டன. இவற்றின் மூலம் தினமும் 400 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் ரயில் நிலைய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை ரயில் நிலைய 1-வது மற்றும் 2-வது நடைமேடையில் உள்ள மேற்கூரைகளில் 100 கிலோ சூரியஒளி மின் தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் பெறப்படும் மின்சாரம் மூலம் ரயில் நிலையத்திற்கு மாதம் ரூ.52 ஆயிரம் வரை மின்கட்டணம் மிச்சமாகிறது. அதன்படி இதுவரை ரூ.6 லட்சத்து 27 ஆயிரம் மின்கட்டணம் சேமிக்கப்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...