மாற்று திறனாளிகளை அவமதிக்கும் வகையில் சமூக வளைதளத்தில் பதிவிட்ட திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!

கோவை: மாற்று திறனாளிகளை அவமதிக்கும் வகையில் சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ள திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.


கோவை: மாற்று திறனாளிகளை அவமதிக்கும் வகையில் சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ள திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.



கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாற்று திறனாளர்கள் நலன் சங்கத்தினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்த மனுவில், மாற்று திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் "நொண்டி" என்ற கீழ்த்தரமான வார்த்தையை உபயோகப்படுத்தி பேசியதாகவும் இது மாற்று திறனாளிகள் மத்தியில் மன வருத்தம் ஏற்படுத்துவதாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், இது மாற்று திறனாளிகள் உரிமைச் சட்டத்திற்கு முரணான செயல் என்றும் எனவே, உடனடியாக திருமாவளவன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு அளித்தனர்.

இதே போல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பினர், இந்து மத பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்ற தர வழிவகை செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...