கோவை: மாற்று திறனாளிகளை அவமதிக்கும் வகையில் சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ள திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
கோவை: மாற்று திறனாளிகளை அவமதிக்கும் வகையில் சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ள திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாற்று திறனாளர்கள் நலன் சங்கத்தினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் அளித்த மனுவில், மாற்று திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் "நொண்டி" என்ற கீழ்த்தரமான வார்த்தையை உபயோகப்படுத்தி பேசியதாகவும் இது மாற்று திறனாளிகள் மத்தியில் மன வருத்தம் ஏற்படுத்துவதாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், இது மாற்று திறனாளிகள் உரிமைச் சட்டத்திற்கு முரணான செயல் என்றும் எனவே, உடனடியாக திருமாவளவன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு அளித்தனர்.
இதே போல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பினர், இந்து மத பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்ற தர வழிவகை செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாற்று திறனாளர்கள் நலன் சங்கத்தினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் அளித்த மனுவில், மாற்று திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் "நொண்டி" என்ற கீழ்த்தரமான வார்த்தையை உபயோகப்படுத்தி பேசியதாகவும் இது மாற்று திறனாளிகள் மத்தியில் மன வருத்தம் ஏற்படுத்துவதாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், இது மாற்று திறனாளிகள் உரிமைச் சட்டத்திற்கு முரணான செயல் என்றும் எனவே, உடனடியாக திருமாவளவன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு அளித்தனர்.
இதே போல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பினர், இந்து மத பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்ற தர வழிவகை செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர்.