கோவையில் கடந்த 2 ஆண்டுகளிகல் 10,400 பெண்கள் திருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்

கோவை: கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,400 பெண்கள் திருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர், என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,400 பெண்கள் திருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர், என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

பெண்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பணமும், 8 கிராம் தங்க நாணயமும், பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் பணமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. நிதி உதவி வேண்டுவோர், திருமணத்துக்கு 40 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், இ-சேவை மையங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம், இத்திட்டங்களுக்கு பயனாளிகள் விண்ணப்பம் அளித்து வருகின்றனர். பெறப்பட்ட விண்ணப்பங்கள், மாவட்ட சமூகநலத் துறைக்கு அலுவலகத்துக்கு, சரி பார்க்க அனுப்பப்படுகிறது. பின், தகுதியுள்ள விண்ணப்பங்கள் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. 

இது குறித்து சமூகநலத் துறை அதிகாரி கூறுகையில், "கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 10 ஆயிரத்து 400 பெண்கள் திருமண நிதியுதவித் திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர். நடப்பு ஆண்டிற்கு, இதுவரை இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை," என்றார்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...