கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவில் கையெழுத்துப் போடாமல் இருக்கும் ஆளுநரை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவில் கையெழுத்து போடாமல் இருக்கும் ஆளுநரை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவில் கையெழுத்துப் போடாமல் இருக்கும் ஆளுநர் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

மேலும், ஆட்சியர் அலுவலகம் முன்பு கையில் பேனாவுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர், பேனாவை ஆட்சியரிடம் கொடுத்து ஆளுநருக்கு அனுப்ப போவதாக தெரிவித்தனர்.

இதனிடையே, பேனாவுடன் ஆட்சியரை சந்திக்க காவல் துறை அனுமதி மறுத்ததால் கொரியர் மூலம் ஆளுநருக்கு அனுப்ப போவதாக மாணவர் சங்கத்தினர் தெரிவித்து கலைந்து சென்றனர்.

அப்போது, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவில் கையெழுத்துப் போடாமல் இருக்கும் ஆளுநர் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
மேலும், ஆட்சியர் அலுவலகம் முன்பு கையில் பேனாவுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர், பேனாவை ஆட்சியரிடம் கொடுத்து ஆளுநருக்கு அனுப்ப போவதாக தெரிவித்தனர்.
இதனிடையே, பேனாவுடன் ஆட்சியரை சந்திக்க காவல் துறை அனுமதி மறுத்ததால் கொரியர் மூலம் ஆளுநருக்கு அனுப்ப போவதாக மாணவர் சங்கத்தினர் தெரிவித்து கலைந்து சென்றனர்.