கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நாற்பத்து மூன்று பவுன் நகை மற்றும் லேப்டாப்பை திருடிச் சென்ற கொள்ளையர்கள்..! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நாற்பத்து மூன்று பவுன் நகை மற்றும் லேப்டாப்பை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நாற்பத்து மூன்று பவுன் நகை மற்றும் லேப்டாப்பை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் முத்துநகர் அருகே வேளாங்கண்ணி நகர் பகுதியில் வசித்து வருபவர் விகாஸ்(27). சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் பிரசவத்திற்கு தனது சொந்த ஊரான காங்கேயம் சென்று இருந்தார்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி மனைவியைப் பார்க்க காங்கேயம் சென்ற விகாஸ் அங்கிருந்து நேராக பணிக்கு சென்று உள்ளார். இதனிடையே, இன்று மதியம் அருகில் வசிப்பவர்கள் வீட்டின் முன் கதவு திறந்த நிலையில், இருப்பதாக தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதனையடுத்து, வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நாற்பத்து மூன்றரை பவுன் நகை மற்றும் லேப்டாப் திருடு போயுள்ளது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, போத்தனூர் காவல் நிலையத்தில் விகாஸ் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்துள்ள குற்றபிரிவு போலீசார் கொள்ளை சம்பவத்தில ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர். வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

குடியிருப்புகள் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அருகில் வசிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...