கோவை பீளமேடு அருகே வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் விஷம் அருந்தி தற்கொலை - போலீசார் விசாரணை!

கோவை: கோவை பீளமேடு அருகே வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததின் காரணமாக வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை பீளமேடு அருகே வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததின் காரணமாக வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு முருகன் நகரை சேர்ந்தவர் குணசேகரன்(45). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி யசோதா(41).கோவை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், குணசேகரனுக்கு பணப்பிரச்சனை இருந்ததன் காரணமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் பெற்றதாகவும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று விரக்தியில் இருந்த குணசேகரன் திருச்சி சாலையில் பகுதியில் ஒரு தனியார் கம்பெனி அருகில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார்.

இதனை கண்ட அங்கிருந்த பொது மக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குணசேகரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...