தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) இன்று அதிகாலை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நிலைகுறைவால் காலமானார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) இன்று அதிகாலை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நிலைகுறைவால் காலமானார்.
தாயார் தவுசாயம்மாள் மறைவை அடுத்து உடனடியாக, சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரது தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், நேரில் ஆறுதல் கூற சேலம் வர உள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், முதல்வரின் தாயார் மறைவுக்கு திமுக தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "முதல்வரின் தாயார் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு மனவேதனைக்கு உள்ளானேன். அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதல்வர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம், இரங்கல்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் அவர்களது ஆழந்த இரங்கலை சமூக வலைதளம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
தாயார் தவுசாயம்மாள் மறைவை அடுத்து உடனடியாக, சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரது தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், நேரில் ஆறுதல் கூற சேலம் வர உள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், முதல்வரின் தாயார் மறைவுக்கு திமுக தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "முதல்வரின் தாயார் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு மனவேதனைக்கு உள்ளானேன். அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதல்வர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம், இரங்கல்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் அவர்களது ஆழந்த இரங்கலை சமூக வலைதளம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.