பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. ஆழியாறு பூங்கா பராமரிப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில், அங்குள்ள மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. ஆழியாறு பூங்கா பராமரிப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில், அங்குள்ள மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக, ஆழியாறு அணை மற்றும் பூங்காவிற்கு, பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டது. இதனால், பூங்கா பராமரிப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வறுமையில் தவித்தனர்.

வருமானம் இன்றி தவித்து வரும் அவர்களின் துயர நிலையை அறிந்த, ஆழியாறு அணையில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் மாணிக்கவேல், தனது சொந்த சேமிப்பு பணத்தில் இருந்து அவர்களுக்கு உதவ முடிவு செய்தார். பாதிக்கபட்ட மக்களின் தேவைகளை அறிந்து, 50 குடும்பங்களுக்கு தலா 650 ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க திட்டமிட்டார்.
அதன்படி, முதற்கட்டமாக 33 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். பொதுப்பணித்துறை அதிகாரியின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக, ஆழியாறு அணை மற்றும் பூங்காவிற்கு, பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டது. இதனால், பூங்கா பராமரிப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வறுமையில் தவித்தனர்.

வருமானம் இன்றி தவித்து வரும் அவர்களின் துயர நிலையை அறிந்த, ஆழியாறு அணையில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் மாணிக்கவேல், தனது சொந்த சேமிப்பு பணத்தில் இருந்து அவர்களுக்கு உதவ முடிவு செய்தார். பாதிக்கபட்ட மக்களின் தேவைகளை அறிந்து, 50 குடும்பங்களுக்கு தலா 650 ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க திட்டமிட்டார்.
அதன்படி, முதற்கட்டமாக 33 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். பொதுப்பணித்துறை அதிகாரியின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.