ஆழியார் பொதுப்பணித்துறை அதிகாரிக்கு குவியும் பாராட்டுகள்..! ஊரடங்கால் பாதிக்கபட்ட 50 குடும்பங்களுக்கு சொந்த செலவில் உதவி..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. ஆழியாறு பூங்கா பராமரிப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில், அங்குள்ள மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. ஆழியாறு பூங்கா பராமரிப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில், அங்குள்ள மக்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக, ஆழியாறு அணை மற்றும் பூங்காவிற்கு, பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டது. இதனால், பூங்கா பராமரிப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வறுமையில் தவித்தனர். 



வருமானம் இன்றி தவித்து வரும் அவர்களின் துயர நிலையை அறிந்த, ஆழியாறு அணையில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் மாணிக்கவேல், தனது சொந்த சேமிப்பு பணத்தில் இருந்து அவர்களுக்கு உதவ முடிவு செய்தார். பாதிக்கபட்ட மக்களின் தேவைகளை அறிந்து, 50 குடும்பங்களுக்கு தலா 650 ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க திட்டமிட்டார். 

அதன்படி, முதற்கட்டமாக 33 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். பொதுப்பணித்துறை அதிகாரியின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...