கோவையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மூன்று தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோவை: கோவையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மூன்று தொகுதிக்கான வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மூன்று தொகுதிக்கான வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்மரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது.



அதில், சிங்காநல்லூர் தொகுதியில் நர்மதா என்பவரும் வடக்கு தொகுதியில் பாலேந்திரன், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வகாப்(எ)தமிழ்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.



மீதம் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண்களும் 117 தொகுதிகளில் பெண்களும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...