மத்திய அரசுக்கு சொந்தமான பஞ்சாலைகளை திறக்க வலியுறுத்தி கோவையில் மில் தொழிலாளர்கள் தர்ணா!

கோவை: மத்திய அரசுக்கு சொந்தமான பஞ்சாலைகளை திறக்க வலியுறுத்தி கோவையில் மில் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மத்திய அரசுக்கு சொந்தமான பஞ்சாலைகளை திறக்க வலியுறுத்தி கோவையில் மில் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசுக்கு சொந்தமான 7 என்டிசி பஞ்சாலைகள் தமிழகத்தில் கோவை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டது. அதன்பின் சில தளர்வுகளின் அடிப்படையில் திறக்கப்பட்ட ஆலைகள் முழுமையாக செயல்படாமல் பகுதி நேரம் மட்டுமே இயங்கி வருகின்றன. மேலும் ஆலை நிர்வாக பொறுப்பில் உள்ளவர்களுக்கு முழு சம்பளமும், தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் வழங்கப்பட்டது. இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றது.

மேலும், போராட்டத்தின் தீர்வாக தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டது.



இருப்பினும் ஆலைகள் பகுதி நேரம் மட்டுமே இயங்குவதால் இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வேலையின்றி இருப்பதாகவும், உடனடியாக ஆலைகளை முழுமையாக திறக்க வேண்டும் எனவும் அனைவருக்கும் முழு சம்பளம் வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமநாதபுரம் பகுதியில் உள்ள பங்கஜா மில்ஸ் பஞ்சாலை முன்பு தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, கோவையில் CSW மில், முருகன் மில், கம்போடியா மில் உள்ளிட்ட மில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் எச்.எம்.எஸ், எல்.பி.எஃப், ஏ.ஐ.டி.யூ.சி, உள்ளிட்ட தொழிற் சங்கங்களின் தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...