மத்திய அரசுக்கு சொந்தமான பஞ்சாலைகளை திறக்க வலியுறுத்தி கோவையில் மில் தொழிலாளர்கள் தர்ணா!

கோவை: மத்திய அரசுக்கு சொந்தமான பஞ்சாலைகளை திறக்க வலியுறுத்தி கோவையில் மில் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மத்திய அரசுக்கு சொந்தமான பஞ்சாலைகளை திறக்க வலியுறுத்தி கோவையில் மில் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசுக்கு சொந்தமான 7 என்டிசி பஞ்சாலைகள் தமிழகத்தில் கோவை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டது. அதன்பின் சில தளர்வுகளின் அடிப்படையில் திறக்கப்பட்ட ஆலைகள் முழுமையாக செயல்படாமல் பகுதி நேரம் மட்டுமே இயங்கி வருகின்றன. மேலும் ஆலை நிர்வாக பொறுப்பில் உள்ளவர்களுக்கு முழு சம்பளமும், தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் வழங்கப்பட்டது. இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றது.

மேலும், போராட்டத்தின் தீர்வாக தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டது.



இருப்பினும் ஆலைகள் பகுதி நேரம் மட்டுமே இயங்குவதால் இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வேலையின்றி இருப்பதாகவும், உடனடியாக ஆலைகளை முழுமையாக திறக்க வேண்டும் எனவும் அனைவருக்கும் முழு சம்பளம் வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமநாதபுரம் பகுதியில் உள்ள பங்கஜா மில்ஸ் பஞ்சாலை முன்பு தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, கோவையில் CSW மில், முருகன் மில், கம்போடியா மில் உள்ளிட்ட மில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் எச்.எம்.எஸ், எல்.பி.எஃப், ஏ.ஐ.டி.யூ.சி, உள்ளிட்ட தொழிற் சங்கங்களின் தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...