திருப்பூர்: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், என மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் திருப்பூரில் பேட்டி அளித்துள்ளார்.
திருப்பூர்: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், என மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்
திருப்பூரில் பேட்டி அளித்துள்ளார்.

திருப்பூரில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் கொரோனா ஊரடங்கு காலத்தில் சேவைகள் செய்தவர்களை கௌரவிக்கும் விதமாக, கேடயங்கள் வழங்குதல் மற்றும் நல உதவிகள் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளியை தற்போதைய சூழலில் திறப்பது சரியான முடிவாக இருக்காது எனவும் ஜனவரி மாதத்திற்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என தெரிவித்தார்.

அதுவரையில், ஆன்லைன் மற்றும் கல்வி சேனல் வாயிலாக வகுப்புகளை நடத்த அரசு பரிந்துரைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும், என தெரிவித்தார்.

மத்திய அரசின் விவசாய மசோதாவின் எதிர்ப்பு குறித்து பதில் அளித்த பொன்ராஜ், விவசாய மசோதா விவசாயிகளை கூலிகளாக மாற்றும் எனவும் இதில் விவசாய பொருட்களுக்கான குறைந்த பட்ச விலை குறித்த அறிவிப்பு இல்லை, எனவும் தெரிவித்தார்.
திருப்பூரில் பேட்டி அளித்துள்ளார்.

திருப்பூரில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் கொரோனா ஊரடங்கு காலத்தில் சேவைகள் செய்தவர்களை கௌரவிக்கும் விதமாக, கேடயங்கள் வழங்குதல் மற்றும் நல உதவிகள் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளியை தற்போதைய சூழலில் திறப்பது சரியான முடிவாக இருக்காது எனவும் ஜனவரி மாதத்திற்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என தெரிவித்தார்.

அதுவரையில், ஆன்லைன் மற்றும் கல்வி சேனல் வாயிலாக வகுப்புகளை நடத்த அரசு பரிந்துரைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும், என தெரிவித்தார்.

மத்திய அரசின் விவசாய மசோதாவின் எதிர்ப்பு குறித்து பதில் அளித்த பொன்ராஜ், விவசாய மசோதா விவசாயிகளை கூலிகளாக மாற்றும் எனவும் இதில் விவசாய பொருட்களுக்கான குறைந்த பட்ச விலை குறித்த அறிவிப்பு இல்லை, எனவும் தெரிவித்தார்.