தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இரு நாள் பயிற்சி ஜூலை 14, 15 தேதிகளில் நடைபெறுகிறது. பயிற்சிக் கட்டணம் ரூ.1,770. விவரங்களுக்கு 9488518268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில், காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் முறைகளை கற்றுக்கொடுக்கும் இரு நாள் பயிற்சி திட்டம் வரும் ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ் உள்ளிட்ட பல்வேறு முருங்கை சார்ந்த உணவுப் பொருட்களை தயாரிக்கும் முறைகள் கற்பிக்கப்படும்.
அதேபோல், காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய், காளான் பிழிதல் தொழில்நுட்பம் உள்ளிட்ட காளான் சார்ந்த மதிப்பூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் நவீன தொழில்நுட்பங்களும் இந்தப் பயிற்சியில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் ரூ.1,770 (ரூ.1,500 + 18% GST) கட்டணத்தை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும்.
மருதமலை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தின் வாயில் எண் 7 அருகில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் இந்தப் பயிற்சி நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641003 என்ற முகவரியிலோ, 9488518268 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ் உள்ளிட்ட பல்வேறு முருங்கை சார்ந்த உணவுப் பொருட்களை தயாரிக்கும் முறைகள் கற்பிக்கப்படும்.
அதேபோல், காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய், காளான் பிழிதல் தொழில்நுட்பம் உள்ளிட்ட காளான் சார்ந்த மதிப்பூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் நவீன தொழில்நுட்பங்களும் இந்தப் பயிற்சியில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் ரூ.1,770 (ரூ.1,500 + 18% GST) கட்டணத்தை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும்.
மருதமலை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தின் வாயில் எண் 7 அருகில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் இந்தப் பயிற்சி நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641003 என்ற முகவரியிலோ, 9488518268 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.