கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/2 சவரன் தங்க நகையை கண்டுபிடித்து, மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் உரிய உரிமையாளரான அலிமாவிடம் நேரில் ஒப்படைத்தார். இந்த நேர்மையான செயல் பாராட்டுக்குரியது.


Coimbatore: கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளரின் நேர்மையான செயல் ஒன்று பலரின் பாராட்டுக்கு உரியதாக அமைந்துள்ளது. மத்திய மண்டலத்தின் கீழ் வரும் சிவானந்தா காலனி பகுதியில் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/2 சவரன் தங்க நகையை கண்டறிந்து, அதனை உரிய உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

கோவை மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 100 வார்டுகளில் உள்ள வீடுகள் தோறும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் தூய்மைப் பணியாளர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 10.07.2026 அன்று மத்திய மண்டலம் வார்டு எண் 68-க்கு உட்பட்ட சிவானந்தா காலனி, விசிகே லே அவுட் பகுதியில் வழக்கம்போல் குப்பை சேகரிப்பு பணி நடைபெற்று வந்தது. அப்போது, ஒப்பந்த தூய்மை பணியாளரான (SWMS) முருகன் (வயது 40), வீடுவீடாக சென்று குப்பை சேகரித்துக் கொண்டிருந்தார்.

குப்பை சேகரிப்பு பணியின் போது, முருகன் சேகரித்த குப்பையில் தவறுதலாக 1.1/2 சவரன் தங்க நகை கிடந்ததை கவனித்தார். உடனடியாக அவர் தனது மேலதிகாரிகளான சுகாதார மேற்பார்வையாளர் கார்த்திகேயன் மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளர் சரவணகுமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த மாநகராட்சி அலுவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, தங்க நகையின் உரிமையாளர் அலிமா (வயது 54) என்ற பெண்மணி என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, தூய்மைப் பணியாளர் முருகன், மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/2 சவரன் தங்க நகையை உரிமையாளரான அலிமாவிடம் நேரில் ஒப்படைத்தார்.

தூய்மைப் பணியாளர் முருகனின் நேர்மையான செயல் பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றுள்ளது. ஒரு சாதாரண குப்பை சேகரிப்பு பணியாளர் காட்டிய நேர்மை, பிறருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...