வால்பாறைக்கு சுற்றுலா வந்த 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்த ஈரோடு மாவட்டம், கிருஷ்ணன் பாளையத்தை சேர்ந்த சையது ஷகில் (13) தகப்பனார் பெயர் சையது ஷாஜ், நேற்று குடும்பத்துடன் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

வால்பாறை: கோவை மாவட்டம்  வால்பாறைக்கு சுற்றுலா வந்த ஈரோடு மாவட்டம், கிருஷ்ணன் பாளையத்தை சேர்ந்த சையது ஷகில் (13) தகப்பனார் பெயர் சையது ஷாஜ், நேற்று குடும்பத்துடன் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர். 



மதியம் ஒரு மணி அளவில், அவர்கள் குடும்பத்துடன் கருமலை அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் அருகில் உள்ள ஆற்றுக்கு சென்றுள்ளனர். அப்போது, ஷகில் புகைப்படம் எடுப்பதற்கு முற்பட்ட போது, அவர் கால் தவறி தண்ணீரில் விழுந்து பாறை இடுக்கில் கால் முடியாமல் சிக்கிக் கொண்டார். 

அவரை மீட்க முடியாததால், பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி, மூச்சுத்திணறி உயிரிழந்தார். உடனடியாக, அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சிறுவனை தண்ணீரிலிருந்து வெளியில் எடுத்து அங்குள்ள கருமலை பொதுமருத்துவமனையில் முதலில் உதவிக்காக அழைத்து சென்றனர். 



ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தி, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு சிறுவனின் உடல் கொண்டு வரப்பட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...