வால்பாறைக்கு சுற்றுலா வந்த 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்த ஈரோடு மாவட்டம், கிருஷ்ணன் பாளையத்தை சேர்ந்த சையது ஷகில் (13) தகப்பனார் பெயர் சையது ஷாஜ், நேற்று குடும்பத்துடன் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

வால்பாறை: கோவை மாவட்டம்  வால்பாறைக்கு சுற்றுலா வந்த ஈரோடு மாவட்டம், கிருஷ்ணன் பாளையத்தை சேர்ந்த சையது ஷகில் (13) தகப்பனார் பெயர் சையது ஷாஜ், நேற்று குடும்பத்துடன் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர். 



மதியம் ஒரு மணி அளவில், அவர்கள் குடும்பத்துடன் கருமலை அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் அருகில் உள்ள ஆற்றுக்கு சென்றுள்ளனர். அப்போது, ஷகில் புகைப்படம் எடுப்பதற்கு முற்பட்ட போது, அவர் கால் தவறி தண்ணீரில் விழுந்து பாறை இடுக்கில் கால் முடியாமல் சிக்கிக் கொண்டார். 

அவரை மீட்க முடியாததால், பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி, மூச்சுத்திணறி உயிரிழந்தார். உடனடியாக, அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சிறுவனை தண்ணீரிலிருந்து வெளியில் எடுத்து அங்குள்ள கருமலை பொதுமருத்துவமனையில் முதலில் உதவிக்காக அழைத்து சென்றனர். 



ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தி, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு சிறுவனின் உடல் கொண்டு வரப்பட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...