கோவை: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சுகாதாரத் துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி, வால்பாறை கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வட்டாட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரி விஜயகுமார் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவை: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சுகாதாரத் துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி, வால்பாறை கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வட்டாட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரி விஜயகுமார் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய சார் ஆட்சியர் வைத்தியநாதன், "பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவ பரிசோதனை மையங்களில் இருந்து, கொரோனா பரிசோதனை குறித்த அறிக்கைகள் வருவாய்த் துறைக்கு முறையாக தெரிவிப்பதில்லை, இதை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கைகளை பெற வேண்டும். மேலும் நகர் மற்றும் கிராம பகுதிகளில் செயல்பட்டு வரும் மருந்துக்கடைகளில், மருத்துவச் சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்க கூடாது," என்றார்.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் பொழுது விதிமுறைகளை கடைப்பிடிக்காத, கடை உரிமையாளர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் கடைக்கு சீல் வைத்து அபராதம் விதிக்கப்படும் என்றும எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது சார் ஆட்சியர் கூறுகையில், பொள்ளாச்சி நகர் மற்றும் கிராம பகுதிகளில் செயல்பட்டு வரும், கடைகள், உணவகங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பதில்லை, இவ்வாறு நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பொள்ளாச்சியில் இரவு 8 மணிக்கு மேல் மருந்துக்கடைகள், தவிர அனைத்து கடைகளும் மூட வேண்டும், என்றும் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டத்தில் பேசிய சார் ஆட்சியர் வைத்தியநாதன், "பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவ பரிசோதனை மையங்களில் இருந்து, கொரோனா பரிசோதனை குறித்த அறிக்கைகள் வருவாய்த் துறைக்கு முறையாக தெரிவிப்பதில்லை, இதை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கைகளை பெற வேண்டும். மேலும் நகர் மற்றும் கிராம பகுதிகளில் செயல்பட்டு வரும் மருந்துக்கடைகளில், மருத்துவச் சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்க கூடாது," என்றார்.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் பொழுது விதிமுறைகளை கடைப்பிடிக்காத, கடை உரிமையாளர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் கடைக்கு சீல் வைத்து அபராதம் விதிக்கப்படும் என்றும எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது சார் ஆட்சியர் கூறுகையில், பொள்ளாச்சி நகர் மற்றும் கிராம பகுதிகளில் செயல்பட்டு வரும், கடைகள், உணவகங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பதில்லை, இவ்வாறு நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பொள்ளாச்சியில் இரவு 8 மணிக்கு மேல் மருந்துக்கடைகள், தவிர அனைத்து கடைகளும் மூட வேண்டும், என்றும் உத்தரவிட்டுள்ளார்.