கோவை: பாடகர் மற்றும் நடிகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவையொட்டி கோவை ராஜ் மெலோடிஸ் இன்னிசை குழுவினர் அவர் பாடிய பாடல்களைப் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.
கோவை: பாடகர் மற்றும் நடிகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவையொட்டி கோவை ராஜ் மெலோடிஸ் இன்னிசை குழுவினர் அவர் பாடிய பாடல்களைப் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி திரை இசைப் பாடகரும், குணச்சித்திர நடிகருமான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் பலர் நேரில் சென்று செலுத்தினர். நேற்று இரவே திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், 24 காவலர்கள், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் பண்ணை நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு தமிழகம் முழுவதும் இசைக் கலைஞர்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கோவையில் மறைந்த எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராஜ் மெலோடிஸ் நிறுவனத்தில், இசை கலைஞர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எஸ்.பி.பி யின் பாடல்களை பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல, கோவையின் பல்வேறு இடங்களில் இசைக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி திரை இசைப் பாடகரும், குணச்சித்திர நடிகருமான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் பலர் நேரில் சென்று செலுத்தினர். நேற்று இரவே திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், 24 காவலர்கள், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் பண்ணை நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு தமிழகம் முழுவதும் இசைக் கலைஞர்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கோவையில் மறைந்த எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராஜ் மெலோடிஸ் நிறுவனத்தில், இசை கலைஞர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எஸ்.பி.பி யின் பாடல்களை பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல, கோவையின் பல்வேறு இடங்களில் இசைக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.