பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னைக்கு அடுத்த படியாக மானாவாரி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும், குறிப்பாக, தமிழக கேரள எல்லயைில் பொள்ளாச்சி உள்ளதால், கேரள மக்கள் விரும்பி உண்ணும் மரவள்ளிகிழங்கு, நேந்திரன் வாழை உள்ளிட்டவை இங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னைக்கு அடுத்த படியாக மானாவாரி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும், குறிப்பாக, தமிழக கேரள எல்லயைில் பொள்ளாச்சி உள்ளதால், கேரள மக்கள் விரும்பி உண்ணும் மரவள்ளிகிழங்கு, நேந்திரன் வாழை உள்ளிட்டவை இங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இதில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளான, குள்ளக்கபாளையம், குறும்பபாளையம், தேவம்பாடிவலசு, வடக்கிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில், மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பயிரிடப்பட்ட மரவள்ளிக்கிழங்கை, அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், 9 மாத பயிரான மரவள்ளிக்கிழங்கு, ஒரு ஏக்கரில் சுமார் 12 முதல் 15 டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. நடவு, களை எடுத்தல் போன்ற பணிகளுக்கு, ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
கடந்த ஆண்டு வரையிலும், ஒரு டன்னுக்கு பதினெட்டாயிரம் ரூபாய் வரை விலை கிடைத்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு, கொரோனா நோய் பாதிப்பு காரணமாக, தமிழக - கேரள என இரு மாநில போக்குவரத்து தடைபட்டுள்ளதால், கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்ய வருவதில்லை.
இதனால் தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வியாபாரிகள், 9000 முதல் 13,000 ரூபாய் வரும் வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். ஏற்கனவே, எலி, பெருக்கான் மற்றும் மயில் தொல்லைகளால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், கேரள வியாபாரிகள் வருகை இல்லாததால், தற்போது ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூபாய் 5000 வரை நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள், வேதனை தெரிவித்துள்ளனர்.

இதில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளான, குள்ளக்கபாளையம், குறும்பபாளையம், தேவம்பாடிவலசு, வடக்கிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில், மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பயிரிடப்பட்ட மரவள்ளிக்கிழங்கை, அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், 9 மாத பயிரான மரவள்ளிக்கிழங்கு, ஒரு ஏக்கரில் சுமார் 12 முதல் 15 டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. நடவு, களை எடுத்தல் போன்ற பணிகளுக்கு, ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
கடந்த ஆண்டு வரையிலும், ஒரு டன்னுக்கு பதினெட்டாயிரம் ரூபாய் வரை விலை கிடைத்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு, கொரோனா நோய் பாதிப்பு காரணமாக, தமிழக - கேரள என இரு மாநில போக்குவரத்து தடைபட்டுள்ளதால், கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்ய வருவதில்லை.
இதனால் தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வியாபாரிகள், 9000 முதல் 13,000 ரூபாய் வரும் வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். ஏற்கனவே, எலி, பெருக்கான் மற்றும் மயில் தொல்லைகளால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், கேரள வியாபாரிகள் வருகை இல்லாததால், தற்போது ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூபாய் 5000 வரை நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள், வேதனை தெரிவித்துள்ளனர்.