இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..! கோவையில் எஸ்.பி.பி மறைவிற்கு மெழுகுவர்த்தியில் ஓவியம் வரைந்து அஞ்சலி!

கோவை: மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவையை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா (உன்னால் முடியும் தம்பி) என்பவர் மெழுகுவர்த்தியில் ஆயில் பெயிண்டிங் மூலம் எஸ்.பி.பியின் உருவத்தை வரைந்து அதில் இந்த வரிகளை பதிவிட்டு உள்ளார்.


கோவை: மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவையை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா (உன்னால் முடியும் தம்பி) என்பவர் மெழுகுவர்த்தியில் ஆயில் பெயிண்டிங் மூலம் எஸ்.பி.பியின் உருவத்தை வரைந்து அதில் இந்த வரிகளை பதிவிட்டு உள்ளார்.

கோவையை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா, அவ்வப்போது பல்வேறு வகையிலான சிற்பங்கள் செய்வது வழக்கமாக கொண்டு உள்ளவர்.

சிறிய அளவிலான உலக கோப்பை, எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம்ஜிஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பது சுதந்திர தினத்தன்று காந்தி, திலகர், பகத்சிங், விவேகானந்தர், நேதாஜி, பாரதியார், நேரு, ஆசாத், ராஜாராம் மோகன், ஜாகீர் உசேன், அப்துல் கலாம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் உருவங்களை மெழுகுவர்த்தியால் உருவாக்கி இருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இதனை உருவாக்கிய யு.எம்.டி ராஜா கூறுகையில்,

உன்னால் முடியும் தம்பி தம்பி, உனக்குள் இருக்கும் உன்னை நம்பி என்ற பாடல்கள் மூலம் பல்வேறு இளைஞர்களின் திறமைகளை, தனது பாடல் வரிகள் மூலம் திறமைகளை வெளிக்கொண்டு வந்தவர் என புகழாரம் சூட்டியவர், அதில் தானும் ஒருவன் என்றார்.

மேலும், அவர் மறைந்தாலும் அவரது குரல் ஓசை என்றும் எஸ்.பி.பியின் விருப்பப்பட்ட பாடல்களில் ஒன்றான டுயட் படத்தில் வரும் அஞ்சலி அஞ்சலி எனும் பாடல் வரிகளை, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வடிவமைப்பு செய்துள்ளதாக கூறினார். மக்களை விட்டு நீங்காது என்றும் ஒளியாக இருப்பார் என்பதை உணர்த்தும் வகையில் மெழுகுவர்த்தியில் இதனை வடிவமைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...