கோவையில் யானை மிதித்து 75 வயது மூதாட்டி பலி

கோவை: கோவை, பன்னிமடை அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

கோவை: கோவை, பன்னிமடை அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

கோவையை ஒட்டியுள்ள, ஆனைக்கட்டி,மாங்கரை, தடாகம், பன்னிமடை உள்ளிட்ட இடங்களில் 100 மேற்பட்ட காட்டு யானைகள் வசித்து வருகின்றனர்.அவை, அடிக்கடி நீர் மற்றும் உணவு தேவைக்காக குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது வழக்கம். இந்நிலையில் இன்று, அதிகாலை 4 மணிக்கு பன்னிமடை பகுதியை சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டி லீலாவதி, அருகில் இருந்த கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு சுற்றி கொண்டிருந்த ஒற்றை யானை மூதாட்டியை பலமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே, அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த வனத்துறையும், காவல் துறையும் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சமீபத்தில் பன்னிமடை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பொது மக்களுக்கு அச்சுறுத்தி வருகின்றன, என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

இதை தொடர்ந்து, மூதாட்டியின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து தடாகம் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம், வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...