பொள்ளாச்சி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்திய கூலி தொழிலாளர்கள் 2 பேர் கைது

கோவை: பொள்ளாச்சி அருகே வீட்டில் சிலர் கஞ்சா செடி வளர்த்தி விற்பனை செய்து வருவதாக, காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



கோவை: பொள்ளாச்சி அருகே வீட்டில் சிலர் கஞ்சா செடி வளர்த்தி விற்பனை செய்து வருவதாக, காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, கோட்டூர் அருகே உள்ள தென்சங்கம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார், இன்று ஆய்வு மேற்கொண்டனர். 



இதில், தென்சங்கம்பாளையம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் ஐயப்பன் (25), மற்றும் சந்தோஷ் (22), ஆகியோரது வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். 

இதில், ஐயப்பன் வீட்டிலிருந்து, போலீசார் இரண்டு கஞ்சா செடிகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், சந்தோஷ் வீட்டிலிருந்து கஞ்சா செடிகள் மற்றும் 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் இருவரும் கஞ்சா செடி வீட்டில் வளர்த்தி சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த கோட்டூர் போலீசார், வழக்கு பதிவு செய்து, பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றம் 2ல் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...