கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பன்னர் தலைமையில் நடைபெறுகிறது. உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டுதல் மற்றும் அரசு உதவிகள் வழங்கப்படும்.
Coimbatore: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர் முகாம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூலை 10, 2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பன்னர் தலைமையில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் இவ்வாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், 11ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்து கொள்ளலாம். உயர்கல்வியில் சேருவதற்கு தேவையான சான்றுகள், அரசு சார்ந்த உதவிகள் மற்றும் அரசு சார்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
அரசு ITI, Polytechnic மற்றும் அரசு கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, துணை மருத்துவம், சட்டம் போன்ற கல்லூரிகள் சார்ந்த சேர்க்கை தகவல்களை பெற்று பயன்பெறலாம். கல்விக்கடன் சார்ந்த உதவிகளையும் பெற்றிடலாம்.
முகாமில் பங்குபெறும் மாணவர்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளான வங்கி கணக்கு புத்தகம், ஆதார், சாதிச்சான்று, மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை போன்றவைகளை தவறாமல் எடுத்துவர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பன்னர் தெரிவித்துள்ளார்.
சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம். தொடர்பு எண்கள்: 9487047568, 9788858829, 8754898863.
இம்முகாமில் இவ்வாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், 11ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்து கொள்ளலாம். உயர்கல்வியில் சேருவதற்கு தேவையான சான்றுகள், அரசு சார்ந்த உதவிகள் மற்றும் அரசு சார்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
அரசு ITI, Polytechnic மற்றும் அரசு கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, துணை மருத்துவம், சட்டம் போன்ற கல்லூரிகள் சார்ந்த சேர்க்கை தகவல்களை பெற்று பயன்பெறலாம். கல்விக்கடன் சார்ந்த உதவிகளையும் பெற்றிடலாம்.
முகாமில் பங்குபெறும் மாணவர்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளான வங்கி கணக்கு புத்தகம், ஆதார், சாதிச்சான்று, மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை போன்றவைகளை தவறாமல் எடுத்துவர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பன்னர் தெரிவித்துள்ளார்.
சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம். தொடர்பு எண்கள்: 9487047568, 9788858829, 8754898863.