கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹமீத் யாசின், மோகன்ராஜ், மாரிமுத்து ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய காதர் பாட்ஷாவின் மகன் ஹமீத் யாசின் (22), மணியின் மகன் மோகன்ராஜ் (21), மற்றும் ராஜாவின் மகன் மாரிமுத்து (23) ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்திருந்தனர்.

அவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் பரிந்துரை செய்தார்.

அந்த பரிந்துரையை ஏற்று, கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவரையும் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, ஹமீத் யாசின், மோகன்ராஜ் மற்றும் மாரிமுத்து ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ அல்லது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

மேலும், தங்கள் பகுதியில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் 94981 81212 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிலும், 77081 00100 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...