கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 101 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கோவை: கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, ஐ.ஏ.எஸ்., முன்னிலையிலும், செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 101 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, தெருவிளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு மேயரும், மாநகராட்சி ஆணையாளரும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் துணை மேயர் ரா. வெற்றிச்செல்வன், துணை ஆணையாளர்கள், மாநகர தலைமைப் பொறியாளர், நகர்நல அலுவலர், மாநகர கல்வி அலுவலர், மண்டல உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, தெருவிளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு மேயரும், மாநகராட்சி ஆணையாளரும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் துணை மேயர் ரா. வெற்றிச்செல்வன், துணை ஆணையாளர்கள், மாநகர தலைமைப் பொறியாளர், நகர்நல அலுவலர், மாநகர கல்வி அலுவலர், மண்டல உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.