பொள்ளாச்சி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்திய கூலி தொழிலாளர்கள் 2 பேர் கைது

கோவை: பொள்ளாச்சி அருகே வீட்டில் சிலர் கஞ்சா செடி வளர்த்தி விற்பனை செய்து வருவதாக, காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



கோவை: பொள்ளாச்சி அருகே வீட்டில் சிலர் கஞ்சா செடி வளர்த்தி விற்பனை செய்து வருவதாக, காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, கோட்டூர் அருகே உள்ள தென்சங்கம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார், இன்று ஆய்வு மேற்கொண்டனர். 



இதில், தென்சங்கம்பாளையம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் ஐயப்பன் (25), மற்றும் சந்தோஷ் (22), ஆகியோரது வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். 

இதில், ஐயப்பன் வீட்டிலிருந்து, போலீசார் இரண்டு கஞ்சா செடிகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், சந்தோஷ் வீட்டிலிருந்து கஞ்சா செடிகள் மற்றும் 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் இருவரும் கஞ்சா செடி வீட்டில் வளர்த்தி சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த கோட்டூர் போலீசார், வழக்கு பதிவு செய்து, பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றம் 2ல் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...