கோவை: பிஏபி பாசன திட்டத்தில் திருமூர்த்தி அணையின் மூலமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கோவை: பிஏபி பாசன திட்டத்தில் திருமூர்த்தி அணையின் மூலமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

தென்மேற்கு பருவமழையால் இந்தாண்டு பிஏபி தொகுப்பு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதையடுத்து, பரம்பிக்குளம் அணையிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு, தண்ணீர் திறக்கப்பட்டதால் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம், தற்போது 39.41 அடியாக உள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள பிஏபி திட்ட அலுவலகத்தில் கண்காணிப்பு பொறியாளர், முத்துசாமி தலைமையில் பிஏபி விவசாயிகள் ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி, நடைபெற்றது. இதில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி திட்டத்தின் கீழ், 2-ம் மண்டல பாசனத்துக்கு வரும் 28 -ம் தேதி முதல் 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு, 8700 மில்லியன் கன அடி தண்ணீரை நான்கரை சுற்றுக்கு விட அரசுக்கு பரிந்துரை செய்ய விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதனால், 95 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, நிலக்கடலை, மக்காசோளம், சின்னவெங்காயம், பந்தல் காய்கறிகள் பயிரிட முடியும் என்பதால், அதற்கான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதை, ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் தண்ணீர் திறப்பு குறித்த பரிந்துரையை அரசுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழையால் இந்தாண்டு பிஏபி தொகுப்பு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதையடுத்து, பரம்பிக்குளம் அணையிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு, தண்ணீர் திறக்கப்பட்டதால் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம், தற்போது 39.41 அடியாக உள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள பிஏபி திட்ட அலுவலகத்தில் கண்காணிப்பு பொறியாளர், முத்துசாமி தலைமையில் பிஏபி விவசாயிகள் ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி, நடைபெற்றது. இதில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி திட்டத்தின் கீழ், 2-ம் மண்டல பாசனத்துக்கு வரும் 28 -ம் தேதி முதல் 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு, 8700 மில்லியன் கன அடி தண்ணீரை நான்கரை சுற்றுக்கு விட அரசுக்கு பரிந்துரை செய்ய விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதனால், 95 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, நிலக்கடலை, மக்காசோளம், சின்னவெங்காயம், பந்தல் காய்கறிகள் பயிரிட முடியும் என்பதால், அதற்கான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதை, ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் தண்ணீர் திறப்பு குறித்த பரிந்துரையை அரசுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.