திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து பொள்ளாச்சியில், ஆலோசனை கூட்டம்; அரசுக்கு பரிந்துரை செய்ய அதிகாரிகள் முடிவு.

கோவை: பிஏபி பாசன திட்டத்தில் திருமூர்த்தி அணையின் மூலமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கோவை: பிஏபி பாசன திட்டத்தில் திருமூர்த்தி அணையின் மூலமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 



தென்மேற்கு பருவமழையால் இந்தாண்டு பிஏபி தொகுப்பு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

இதையடுத்து, பரம்பிக்குளம் அணையிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு, தண்ணீர் திறக்கப்பட்டதால் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம், தற்போது 39.41 அடியாக உள்ளது. 

இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள பிஏபி திட்ட அலுவலகத்தில் கண்காணிப்பு பொறியாளர், முத்துசாமி தலைமையில் பிஏபி விவசாயிகள் ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி, நடைபெற்றது. இதில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி திட்டத்தின் கீழ், 2-ம் மண்டல பாசனத்துக்கு வரும் 28 -ம் தேதி முதல் 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு, 8700 மில்லியன் கன அடி தண்ணீரை நான்கரை சுற்றுக்கு விட அரசுக்கு பரிந்துரை செய்ய விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதனால், 95 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, நிலக்கடலை, மக்காசோளம், சின்னவெங்காயம், பந்தல் காய்கறிகள் பயிரிட முடியும் என்பதால், அதற்கான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

இதை, ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் தண்ணீர் திறப்பு குறித்த பரிந்துரையை அரசுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...