பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் 7 பறக்கும் படை நியமிப்பு

கோவை: நாடு முழுவதும் வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உள்ளது. தற்போது, கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கும், விசர்ஜன ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

கோவை: நாடு முழுவதும் வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உள்ளது. தற்போது, கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கும், விசர்ஜன ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, ஆனைமலை கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வட்டாட்சியர்கள் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் கூறுகையில்., "வரும் 22ம் தேதி பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கும், விசர்ஜன ஊர்வலத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்கள் முன்பு சிலை வைத்தல், ஒலிபெருக்கி பயன்படுத்துதல் என எதற்கும் அனுமதி இல்லை. வீடுகளில், வழக்கம்போல விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்யலாம், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சிலை வாங்க கடைக்கு செல்ல வேண்டும்." 

இதனிடையே, விதிமீறல்களை கண்காணிக்க ஏழு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் சிலை வைத்தால், வருவாய்துறை மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...