பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் 7 பறக்கும் படை நியமிப்பு

கோவை: நாடு முழுவதும் வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உள்ளது. தற்போது, கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கும், விசர்ஜன ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

கோவை: நாடு முழுவதும் வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உள்ளது. தற்போது, கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கும், விசர்ஜன ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, ஆனைமலை கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வட்டாட்சியர்கள் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் கூறுகையில்., "வரும் 22ம் தேதி பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கும், விசர்ஜன ஊர்வலத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்கள் முன்பு சிலை வைத்தல், ஒலிபெருக்கி பயன்படுத்துதல் என எதற்கும் அனுமதி இல்லை. வீடுகளில், வழக்கம்போல விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்யலாம், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சிலை வாங்க கடைக்கு செல்ல வேண்டும்." 

இதனிடையே, விதிமீறல்களை கண்காணிக்க ஏழு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் சிலை வைத்தால், வருவாய்துறை மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...