பொள்ளாச்சி அருகே சாலையோர தடுப்பு கம்பி மீது வாகனம் மோதி விபத்து: இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பலி

கோவை: பொள்ளாச்சி, ஆழியாறு அருகே சாலையோர தடுப்பு கம்பி மீது இருசக்கர வாகனம் மோதியதில், இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: பொள்ளாச்சி, ஆழியாறு அருகே சாலையோர தடுப்பு கம்பி மீது இருசக்கர வாகனம் மோதியதில், இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் வசந்தகுமார் (18), அஜித்குமார் (21). மற்றும் ஆழியார் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஆலன் (21) என இவர்கள் மூவரும் நேற்று இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் ஆழியார் அறிவு திருக்கோவில் அருகே உள்ள ஒரு கடைக்கு சென்று பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அன்பு நகர் அருகே உள்ள வளைவு பகுதியில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புக்கம்பி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், படுகாயமடைந்த மூவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில், சிகிச்சை பலனின்றி கோட்டூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த வசந்தகுமார் மற்றும் ஆழியார் அகதிகள் முகாமைச் சேர்ந்த ஆலன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், அஜீத் குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து தொடர்பாக, ஆழியார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...