கோவையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மீது முகநூல் மூலம் அவதூறு பரப்புபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்!

கோவை: கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உறுப்பினர்கள் மீது முகநூல் மூலம் அவதூறு பரப்புபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உறுப்பினர்கள் மீது முகநூல் மூலம் அவதூறு பரப்புபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது காவல் துறையினரை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில அலுவலகமான பாலன் இல்லத்தை விபச்சார விடுதி என்று கூறியதை கண்டித்தும் மூத்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் நல்லகண்ணு அவர்களை தரக்குறைவாக பேசியும் மாற்று கட்சியை சேர்ந்தவர் என்றும் முகநூலில் பொய்யான செய்திகள் பரவி வருவதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த செய்தியானது "மார்க்சியம் வென்றே தீரும்" என்ற பக்கத்தில் பதிவு இடப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கருப்புசாமி என்ற முகநூல் முகவரியில் சீதாராம் யெச்சூரி தலையில் சட்டியை வைத்தது போல் படத்தை பதிவிட்டுள்ளனர்.

மேலும், பல போலியான முகநூல் முகவரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை குறித்தும் அதன் உறுப்பினர்கள் குறித்தும் ஆபாசமாகவும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.



எனவே, இது போன்ற போலியான முகநூல் முகவரியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது அவதூறு பரப்பும் நபர்களை கண்டறிந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...