கோவையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மீது முகநூல் மூலம் அவதூறு பரப்புபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்!

கோவை: கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உறுப்பினர்கள் மீது முகநூல் மூலம் அவதூறு பரப்புபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உறுப்பினர்கள் மீது முகநூல் மூலம் அவதூறு பரப்புபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது காவல் துறையினரை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில அலுவலகமான பாலன் இல்லத்தை விபச்சார விடுதி என்று கூறியதை கண்டித்தும் மூத்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் நல்லகண்ணு அவர்களை தரக்குறைவாக பேசியும் மாற்று கட்சியை சேர்ந்தவர் என்றும் முகநூலில் பொய்யான செய்திகள் பரவி வருவதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த செய்தியானது "மார்க்சியம் வென்றே தீரும்" என்ற பக்கத்தில் பதிவு இடப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கருப்புசாமி என்ற முகநூல் முகவரியில் சீதாராம் யெச்சூரி தலையில் சட்டியை வைத்தது போல் படத்தை பதிவிட்டுள்ளனர்.

மேலும், பல போலியான முகநூல் முகவரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை குறித்தும் அதன் உறுப்பினர்கள் குறித்தும் ஆபாசமாகவும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.



எனவே, இது போன்ற போலியான முகநூல் முகவரியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது அவதூறு பரப்பும் நபர்களை கண்டறிந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...