கோவையில் தேசிய கொடியை அவமதித்ததாக பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு!

கோவை: தேசிய கொடியை அவமதித்ததாக பாஜக பிரமுகர் வெங்கடேஷ் என்பவர் மீது சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை: தேசிய கொடியை அவமதித்ததாக பாஜக பிரமுகர் வெங்கடேஷ் என்பவர் மீது சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, சரவணம்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் அக்கட்சியின் கொடி கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றினர். கொடிக்கம்பத்தில் அக்கட்சியின் சின்னமான தாமரை சின்னம் இருந்த நிலையில், அதில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இது தேசிய கொடி ஏற்றுவதற்கான சட்ட விதிகளுக்கு புறம்பானது.

இது தொடர்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பா.ஜ.க கணபதி மண்டல தலைவராக இருக்கும் வெங்கடேஷ் மீது தேசியக்கொடி அவமதிப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், கடந்த 15ம் தேதி கோவை வி.கே.கே. மேனன் சாலையில் அனுமதியின்றி சாலையை மறைத்து பா.ஜ.கவினர் சுதந்திர தினவிழா கொண்டாடினர். இது தொடர்பாக பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில பொது செயலாளர் ஜி.கே.செல்வக்குமார், மாவட்ட தலைவர் நந்தகுமார் உட்பட 6 பேர் மீது காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதில் சட்டவிரோதமாகக் கூட்டம் சேர்த்தல், முறையற்ற தடுப்புகள் ஏற்படுத்துதல், தொற்று நோய் பரவும் விதத்தில் செயல்படுதல் ஆகிய 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...