கோவை கணுவாய் பகுதியில் 13 தெருநாய்கள் விஷம் வைத்து கொலை..! போலீசார் விசாரணை

கோவை: கோவை கணுவாய் பகுதியில் 13 தெருநாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை கணுவாய் பகுதியில் 13 தெருநாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.



கோவை துடியலூர் அடுத்த கணுவாய் பகுதியில் உள்ள குப்பநாயக்கன்பாளையம், இந்திரா காலனியில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று காலை எழுந்து பார்க்கும்போது, தெரு நாய்கள் ஆங்காங்கே இறந்து கிடப்பதும், ஒரு சில நாய்கள் உயிருக்கு போராடி வருவதும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக, அவர்கள் பன்னிமடை ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் விலங்குகள் நல வாரியத்திற்கு நாய்கள் இறந்துகிடப்பது குறித்து தகவல் அளித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி அதிகாரிகள் மற்றும் விலங்குகள் நல வாரிய அதிகாரிகள், இறந்த கிடந்த நாய்களை ஆய்வு செய்தனர். 

அதில், விஷம் வைக்கப்பட்ட கோழி கழிவுகளை தின்றதால் இந்த நாய்கள் இறந்து இருக்கலாம் என தெரியவந்தது. தொடர்ந்து, இறந்த கிடந்த நாய்களை உடற்கூறு ஆய்வுக்காக எடுத்து சென்றனர். 



மேற்கொண்டு, அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் தேசிய விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் தடாகம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். 

புகாரைத் தொடர்ந்து, வழக்குபதிவு செய்த தடாகம் போலீசார் கோழி கழிவுகளில் விஷம் வைத்து கொன்றவர்கள் யார்..? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரே பகுதியில் 13 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...