தொடர் விடுமுறை எதிரொலி கோவையில் நேற்று ஒரே நாளில் ரூ.21 கோடிக்கு மது விற்பனை

கோவை: டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டதால், நேற்று ஒரே நாளில் கோவையில் ரூ.21 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை: டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டதால், நேற்று ஒரே நாளில் கோவையில் ரூ.21 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.



சுதந்திர தின விழாவினை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருந்தது. இதேபோல், நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். 

இதனால் மதுபானங்களின் விற்பனை கோவையில் படு ஜோராக நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 297 மதுக்கடைகள் உள்ளன. நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, கோவை மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், "கோவை வடக்கில் மொத்தம் 259 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.11 கோடியே 83 ஆயிரத்துக்கு, மது விற்பனையானது. இதேபோல், கோவை தெற்கில் உள்ள 138 கடைகளில் ரூ.10 கோடியே 38 லட்சத்திற்கு மது விற்பனையாகியுள்ளது. ஆகவே, கோவை மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் ரூ.21 கோடியே 38 லட்சத்து 83 ஆயிரத்திற்கு மது விற்பனையானது."

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...