அங்கோடா லொக்கா மரண வழக்கு: கைது செய்யப்பட்ட மூவரை தனித்தனியாக நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு!

கோவை: இலங்கை போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் அங்கோடா லொக்கா மரணம் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் தனித்தனியாக நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை: இலங்கை போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் அங்கோடா லொக்கா மரணம் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் தனித்தனியாக நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

அங்கோடா லொக்கா மரணம் குறித்த வழக்கில் மூன்று பேரையும் கடந்த 12ம் தேதி சிபிசிஐடியினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க மூன்று நாட்கள் கேட்டிருந்தனர். 

அதன் பொருட்டு சிபிசிஐடியினர் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து இன்று மதியம் 2 மணிக்குள் மூன்று பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோவை தலைமை குற்றவியல் நீதிபதி ஸ்ரீ குமார் உத்தரவிட்டார். 

அதன்படி, மூன்று பேரும் இன்று கோவை நீதிமன்றத்தில் 2 மணி அளவில் ஆஜர்படுத்தப்பட்டனர். சுமார் 2 மணி நேரம் நீதிபதி விசாரணை நடத்தினார். இதனிடையே, மேலும் மூன்று நாட்கள் சிபிசிஐடியினர் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு நீதிபதி அனுமதி அளிக்கவில்லை. 

மேலும், மூன்று பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, தியானேஸ்வரனை பொள்ளாச்சி சிறையிலும், அமானி தான்ஜியை சென்னை புழல் சிறையிலும், சிவகாமசுந்தரியை கோவை மத்திய சிறையிலும் அடைக்க உத்தரவிட்டுள்ளார். 

இதில் அமானி தான்ஜி இன்று கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நாளை சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்கின்றனர். 

இனி 15 நாட்கள் கழித்து சிறையில் இருந்த படியே காணொளி மூலம் மூன்று பேரிடமும் நீதிமன்றத்தில் இருந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...