அங்கோடா லொக்கா மரண வழக்கு: கைது செய்யப்பட்ட மூவரை தனித்தனியாக நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு!

கோவை: இலங்கை போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் அங்கோடா லொக்கா மரணம் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் தனித்தனியாக நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை: இலங்கை போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் அங்கோடா லொக்கா மரணம் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் தனித்தனியாக நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

அங்கோடா லொக்கா மரணம் குறித்த வழக்கில் மூன்று பேரையும் கடந்த 12ம் தேதி சிபிசிஐடியினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க மூன்று நாட்கள் கேட்டிருந்தனர். 

அதன் பொருட்டு சிபிசிஐடியினர் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து இன்று மதியம் 2 மணிக்குள் மூன்று பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோவை தலைமை குற்றவியல் நீதிபதி ஸ்ரீ குமார் உத்தரவிட்டார். 

அதன்படி, மூன்று பேரும் இன்று கோவை நீதிமன்றத்தில் 2 மணி அளவில் ஆஜர்படுத்தப்பட்டனர். சுமார் 2 மணி நேரம் நீதிபதி விசாரணை நடத்தினார். இதனிடையே, மேலும் மூன்று நாட்கள் சிபிசிஐடியினர் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு நீதிபதி அனுமதி அளிக்கவில்லை. 

மேலும், மூன்று பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, தியானேஸ்வரனை பொள்ளாச்சி சிறையிலும், அமானி தான்ஜியை சென்னை புழல் சிறையிலும், சிவகாமசுந்தரியை கோவை மத்திய சிறையிலும் அடைக்க உத்தரவிட்டுள்ளார். 

இதில் அமானி தான்ஜி இன்று கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நாளை சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்கின்றனர். 

இனி 15 நாட்கள் கழித்து சிறையில் இருந்த படியே காணொளி மூலம் மூன்று பேரிடமும் நீதிமன்றத்தில் இருந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...