திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை; 3.67 கோடி நலத்திட்டங்களை வழங்கினார்

திருப்பூர்: இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் கே. விஜயகார்த்திகேயன் தேசியக்கொடி ஏற்றிவைத்து ரூபாய் 3 கோடியே 67 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


திருப்பூர்: இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் கே. விஜயகார்த்திகேயன் தேசியக்கொடி ஏற்றிவைத்து ரூபாய் 3 கோடியே 67 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



கொரோனா ஊரடங்கு காரணத்தால், நாடு முழுவதும் இன்று 74 வது சுதந்திர தின விழா மிக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனையொட்டி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



பின்னர், திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 70 காவலர்களுக்கு, பல்வேறு அரசுத்துறை மற்றும் தன்னார்வலர்கள் என 279 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். 

மேலும், பல்வேறு அரசு துறைகளுக்கு 3 கோடியே 67 லட்சத்து 64 ஆயிரத்திற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பளர், மாநகர காவல் ஆணையர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...