திருப்பூர்: இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் கே. விஜயகார்த்திகேயன் தேசியக்கொடி ஏற்றிவைத்து ரூபாய் 3 கோடியே 67 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருப்பூர்: இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் கே. விஜயகார்த்திகேயன் தேசியக்கொடி ஏற்றிவைத்து ரூபாய் 3 கோடியே 67 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கொரோனா ஊரடங்கு காரணத்தால், நாடு முழுவதும் இன்று 74 வது சுதந்திர தின விழா மிக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனையொட்டி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர், திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 70 காவலர்களுக்கு, பல்வேறு அரசுத்துறை மற்றும் தன்னார்வலர்கள் என 279 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், பல்வேறு அரசு துறைகளுக்கு 3 கோடியே 67 லட்சத்து 64 ஆயிரத்திற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பளர், மாநகர காவல் ஆணையர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.