கோவை: காடுகளை பாதுகாப்பதில் யானைகளுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. யானைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சர்வதேச யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவை: காடுகளை பாதுகாப்பதில் யானைகளுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. யானைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சர்வதேச யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இன்று ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில், சர்வதேச யானைகள் தினம், பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் கொண்டாடப்பட்டது.

இந்த முகாமில் வளர்க்கப்படும் சின்னத்தம்பி உள்ளிட்ட 28 வளர்ப்பு யானைகளை அங்குள்ள ஆற்றில் குளிக்க வைத்து, முகாமில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜை செய்யபட்டு வழிபாடு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து வளர்ப்பு யானைகளுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டது. பின்பு, டாப்சிலிப்பில் நடைபெற்ற யானைகள் தின விழாவில் யானைகள் குறித்த கையேடுகளும், யானை பாகனுக்கு யானைகளை பாதுகாப்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்களுக்கு, சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் டாப்சிலிப்பில் யானைகள் முகாமில் வனத்துறையினர் மற்றும் யானை பாகன்கள் மட்டுமே கலந்து கொண்டு யானைகள் தினத்தை எளிமையாக கொண்டாடினர்.
இந்தநிலையில், இன்று ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில், சர்வதேச யானைகள் தினம், பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் கொண்டாடப்பட்டது.
இந்த முகாமில் வளர்க்கப்படும் சின்னத்தம்பி உள்ளிட்ட 28 வளர்ப்பு யானைகளை அங்குள்ள ஆற்றில் குளிக்க வைத்து, முகாமில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜை செய்யபட்டு வழிபாடு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து வளர்ப்பு யானைகளுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டது. பின்பு, டாப்சிலிப்பில் நடைபெற்ற யானைகள் தின விழாவில் யானைகள் குறித்த கையேடுகளும், யானை பாகனுக்கு யானைகளை பாதுகாப்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்களுக்கு, சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் டாப்சிலிப்பில் யானைகள் முகாமில் வனத்துறையினர் மற்றும் யானை பாகன்கள் மட்டுமே கலந்து கொண்டு யானைகள் தினத்தை எளிமையாக கொண்டாடினர்.