டாப்சிலிப்பில் சர்வதேச யானைகள் தினம் கொண்டாட்டம்: வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு

கோவை: காடுகளை பாதுகாப்பதில் யானைகளுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. யானைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சர்வதேச யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கோவை: காடுகளை பாதுகாப்பதில் யானைகளுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. யானைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சர்வதேச யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இன்று ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில், சர்வதேச யானைகள் தினம், பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் கொண்டாடப்பட்டது.



இந்த முகாமில் வளர்க்கப்படும் சின்னத்தம்பி உள்ளிட்ட 28 வளர்ப்பு யானைகளை அங்குள்ள ஆற்றில் குளிக்க வைத்து, முகாமில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜை செய்யபட்டு வழிபாடு நடைபெற்றது.



இதைத் தொடர்ந்து வளர்ப்பு யானைகளுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டது. பின்பு, டாப்சிலிப்பில் நடைபெற்ற யானைகள் தின விழாவில் யானைகள் குறித்த கையேடுகளும், யானை பாகனுக்கு யானைகளை பாதுகாப்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்களுக்கு, சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் டாப்சிலிப்பில் யானைகள் முகாமில் வனத்துறையினர் மற்றும் யானை பாகன்கள் மட்டுமே கலந்து கொண்டு யானைகள் தினத்தை எளிமையாக கொண்டாடினர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...