கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன் LED விளக்குகளை பயன்படுத்திய வாகனங்கள் மீது கோவில்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்து, அவற்றை அகற்றியதுடன் அபராதமும் விதித்தனர்.


கோவை: கோவை-சக்தி சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சமீப காலமாக சில தனியார் பேருந்துகள் மற்றும் வணிக வாகனங்களில், விதிமுறைகளுக்கு புறம்பாக அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பார்வையை பாதிக்கும் வகையிலான உயர் ஒளித்திறன் LED விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

குறிப்பாக இரவு நேரங்களில் இந்த LED விளக்குகளின் அதீத வெளிச்சத்தால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி, விபத்து அபாயம் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கோவில்பாளையம் போலீசார் இன்று சக்தி சாலையில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மற்றும் வணிகப் பயன்பாட்டு வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்தனர்.



சோதனையில், விதிமுறைகளை மீறி ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன் LED விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து அவை அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.



விபத்து அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய விதிமீறல் உபகரணங்கள் மீது போலீசார் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...