வெள்ள நீரில் தத்தளிக்கும் காந்தவயல் கிராமம்..!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அனை பருவமழை காரணமாக நிரம்பியதால், அதில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு தண்ணீரானது பவானி அற்றின் வழியே பவானிசாகர் அணையை அடைந்து வருகிறது.








கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அனை பருவமழை காரணமாக நிரம்பியதால், அதில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு தண்ணீரானது பவானி அற்றின் வழியே பவானிசாகர் அணையை அடைந்து வருகிறது.

தொடர், உபரி நீர் திறந்து விடபட்டு வருவதால், பவானி அணையின் நீர் மட்டமும் 95 அடிக்கும் மேல் உயர்ந்து உள்ளது. இதனால், பவானி ஆற்றை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும் கந்தவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை பிற பகுதிகளுடன் இணைக்கும் உயர்மட்ட பாலம் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்று வெள்ளத்தால், காந்தவயல், ஆலூர், உளியூர் கிராமத்தை நகரத்துடன் இணைக்கும் லிங்காபுரம் - காந்தவயல் உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கி போக்கு வரத்தானது முற்றிலும் துண்டிக்கபட்டுள்ளது.



30 அடி உயரம் கொண்ட இந்த உயர் பாலம் பவானி சாகர் அணை 95 எட்டியுள்ள நிலையில், தற்போது முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி பாலத்திற்கு மேல் சுமார் 5 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.



இப்பாலத்தினை, கடந்து சென்றே பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளதால், தங்கள் வாழ்வாதாரமே முடங்கியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர், அப்பகுதி கிராம மக்கள்.



மேலும், தேங்கியுள்ள நீரில் ஆபத்தான முறையில் எவ்வித பாதுகாப்பு வசதிகளும் இன்றி, அத்தியவசிய பொருட்களான பால், காய்கறிகள், சமையல் எரிவாயு போன்றவற்றை பரிசல் மூலமே எடுத்து செல்லப்படும் நிலமைக்கு தள்ளபட்டுள்ளனர், இந்த கிராம மக்கள்.

எனவே, உடனடியாக அவர்களின் பயன்பாட்டிற்கு படகு வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...