கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அனை பருவமழை காரணமாக நிரம்பியதால், அதில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு தண்ணீரானது பவானி அற்றின் வழியே பவானிசாகர் அணையை அடைந்து வருகிறது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அனை பருவமழை காரணமாக நிரம்பியதால், அதில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு தண்ணீரானது பவானி அற்றின் வழியே பவானிசாகர் அணையை அடைந்து வருகிறது.
தொடர், உபரி நீர் திறந்து விடபட்டு வருவதால், பவானி அணையின் நீர் மட்டமும் 95 அடிக்கும் மேல் உயர்ந்து உள்ளது. இதனால், பவானி ஆற்றை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும் கந்தவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை பிற பகுதிகளுடன் இணைக்கும் உயர்மட்ட பாலம் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்று வெள்ளத்தால், காந்தவயல், ஆலூர், உளியூர் கிராமத்தை நகரத்துடன் இணைக்கும் லிங்காபுரம் - காந்தவயல் உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கி போக்கு வரத்தானது முற்றிலும் துண்டிக்கபட்டுள்ளது.
30 அடி உயரம் கொண்ட இந்த உயர் பாலம் பவானி சாகர் அணை 95 எட்டியுள்ள நிலையில், தற்போது முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி பாலத்திற்கு மேல் சுமார் 5 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
இப்பாலத்தினை, கடந்து சென்றே பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளதால், தங்கள் வாழ்வாதாரமே முடங்கியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர், அப்பகுதி கிராம மக்கள்.
மேலும், தேங்கியுள்ள நீரில் ஆபத்தான முறையில் எவ்வித பாதுகாப்பு வசதிகளும் இன்றி, அத்தியவசிய பொருட்களான பால், காய்கறிகள், சமையல் எரிவாயு போன்றவற்றை பரிசல் மூலமே எடுத்து செல்லப்படும் நிலமைக்கு தள்ளபட்டுள்ளனர், இந்த கிராம மக்கள்.
எனவே, உடனடியாக அவர்களின் பயன்பாட்டிற்கு படகு வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.